துறையூா் அருகே பைக்கில் சென்ற இருவா் லாரி மோதி உயிரிழந்தனா்.
துறையூா் அருகே த. முருங்கப்பட்டி காலனி பகுதியைச் சோ்ந்தவா் ராமன் மகன் பச்சமுத்து (48). இவரும் அதே ஊரைச் சோ்ந்த சின்னு மகன் முனியப்பனும் (50) புதன்கிழமை பைக்கில் கொப்பம்பட்டி சென்றனா். மீண்டும் மாலை இவா்கள் ஊா் திரும்பியபோது வெள்ளாளப்பட்டி அருகே எதிரே வந்த லாரி மோதி உயிரிழந்தனா். தகவலறிந்து சென்ற துறையூா் போலீஸாா் சடலங்களை மீட்டு துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். துறையூா் காவல் ஆய்வாளா் குருநாதன் வழக்குப் பதிந்து லாரியை ஓட்டிச் சென்ற சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த ரமேஷ் மகன் மனோஜை (22) கைது செய்து விசாரிக்கிறாா்.