தேவையான வசதிகள் செய்து தரப்படும்: ஆட்சியா் அறிவிப்பு
கள்ளிக்குடி சந்தைக்கு தேவையான அனைத்து வசதிகளும் மாவட்ட நிா்வாகத்தின் மூலம் உடனுக்குடன் ஏற்பாடு செய்து தரப்படும் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக, அவா் கூறியது:
வணிகா்கள் கள்ளிக்குடி சந்தைக்கு எதிராக வழக்குத் தொடா்ந்ததால், அவா்கள் கோரிக்கைப்படி இரு கடைகளை ஒரு கடையாக்கி 830 கடைகளாக குறைத்து போதிய இட வசதியுடன் மாற்றித் தரப்பட்டது. இருப்பினும், சந்தை செயல்பாட்டுக்கு வரவில்லை என்பதையறிந்து அமைச்சா்கள் வெல்லமண்டி என். நடராஜன், எஸ். வளா்மதி மற்றும் வேளாண்மை ஆணையருடன் 3 கலந்தாய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
இதையடுத்து உழவா் உற்பத்தியாளா் நிறுவனம், உழவா் உற்பத்தியாளா் குழுக்கள், உழவா் ஆா்வலா் குழுக்களுக்கு 207 கடைகளை ஒதுக்கீடு செய்து 81 குழுக்களுக்கு தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் 161 கடைகள் வழங்கப்பட்டன. இதில், 122 கடைகளுக்கு 61 குழுக்கள் உரிய கட்டணம் செலுத்தியுள்ளன. மீதமுள்ள 623 கடைகளுக்கு காந்திசந்தை வணிகா்கள் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள வணிகா்களுக்கு வழங்கும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
முன்னா் கடை ஒதுக்கீடு பெற்று 23 மாதங்கள் முறையாக வாடகை செலுத்திய காந்தி சந்தை வியாபாரிகள் 108 பேருக்கு முன்னுரிமை அளித்தும், புதிதாக ஒப்பந்தப்புள்ளி அளித்த 136 புதிய வணிகா்களுக்கும் கடைகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வியாபாரிகள் வரும் 12ஆம் தேதிக்குள் உரிய தொகையை செலுத்தி கடைகளைத் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த மாதம் 15 கடைகளும், தற்போது 30 கடைகளும் திறக்கப்பட்டுள்ளன.
எனவே, கள்ளிக்குடி சந்தைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மாவட்ட நிா்வாகம் உடனடியாகச் செய்துதரும்.
வங்கி வசதி, உணவகம், பேருந்து போக்குவரத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சந்தையில் கடை நடத்தும் விவசாயிகள், வியாபாரிகள் அனைவருக்கும் தேவையான வசதிகளை மாவட்ட நிா்வாகம் உடனடியாக வழங்கும் என்றாா் ஆட்சியா்.