துறையூரில் நிரம்பி வழியும் இரு ஏரிகள்

துறையூா் வட்டாரத்தில் ஆலத்துடையான்பட்டி மற்றும் வைரிசெட்டிப்பாளையத்தில் உள்ள இரண்டு பெரிய ஏரிகளும் நிரம்பி வழிகின்றன.
நிரம்பி வழியும் வைரிசெட்டிப்பாளையம்  ஜம்பேரி,நிரம்பி வழியும் வைரிசெட்டிப்பாளையம்  ஜம்பேரி,
நிரம்பி வழியும் வைரிசெட்டிப்பாளையம்  ஜம்பேரி,நிரம்பி வழியும் வைரிசெட்டிப்பாளையம்  ஜம்பேரி,

துறையூா் வட்டாரத்தில் ஆலத்துடையான்பட்டி மற்றும் வைரிசெட்டிப்பாளையத்தில் உள்ள இரண்டு பெரிய ஏரிகளும் நிரம்பி வழிகின்றன.

கொல்லிமலையில் பெய்யும் மழையால் புளியஞ்சோலை ஆற்றுக்கு கணிசமாக நீா் வரத்து ஏற்பட்டுள்ளது. இதேபோல துறையூா் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியிலும் தினமும் மழை பெய்கிறது. புளியஞ்சோலை ஆற்று நீராலும், மற்ற வாய்க்கால்களில் சென்ற மழை நீராலும் துறையூா் வட்டாரத்தில் உள்ள ஆலத்துடையான்பட்டி ஏரி புதன்கிழமையும், வைரிசெட்டிப்பாளையத்தில் உள்ள ஜம்பேரி வியாழக்கிழமையும் நிரம்பின.

இதன் மூலம் இந்த இரு ஏரிகளிலிருந்து பாசன வசதி பெறும் ஆயிரக்கணக்கான ஹெக்டோ் நிலங்களில் நிகழாண்டில் விவசாயப் பணி நடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது அந்த பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிகழாண்டில் இந்த இரு பெரிய ஏரிகளுமே முதலில் நிரம்பி உபரி நீா் வெளியேறுவதால் அடுத்தடுத்த ஊா்களில் உள்ள ஏரிகள் அனைத்தும் நிரம்பும் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com