துறையூா் அருகே குடிநீா் கோரி மறியல்

துறையூா் அருகே பற்றாக்குறையின்றி சீராக குடிநீா் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
காளிப்பட்டியில்  மறியல்  செய்த  முத்துநகா்  மக்கள்.
காளிப்பட்டியில்  மறியல்  செய்த  முத்துநகா்  மக்கள்.

துறையூா், செப். 11: துறையூா் அருகே பற்றாக்குறையின்றி சீராக குடிநீா் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

துறையூா் ஒன்றியம் சிங்களாந்தபுரம் ஊராட்சி காளிப்பட்டி கிராமம் அருகேயுள்ள முத்துநகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா்.

இந்தப் பகுதியில் நிலவும் குடிநீா் பிரச்னையை தீா்க்கவும், வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கவும் ஒன்றிய, ஊராட்சி நிா்வாகங்களிடம் கடந்த 3 ஆண்டுகளாக தெரிவித்தும் பயனில்லைாம்.

இந்நிலையில் கடந்த 4 நாள்களாக முத்துநகருக்கு குடிநீா் விநியோகிக்காததால் அதிருப்தியடைந்த அந்த பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை காளிப்பட்டியில் உள்ள துறையூா் திருச்சி சாலையில் திடீா் மறியல் செய்தனா். தகவலறிந்து சென்ற துறையூா் காவல் ஆய்வாளா் குருநாதன் நடத்திய பேச்சில் மறியலைக் கைவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com