பைக் மீது லாரி மோதல்: இளைஞா், குழந்தை பலி

துறையூா் அருகே வியாழக்கிழமை பைக் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞரும், இவரின் சகோதரியின் குழந்தையும் உயிரிழந்தனா்.

துறையூா் அருகே வியாழக்கிழமை பைக் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞரும், இவரின் சகோதரியின் குழந்தையும் உயிரிழந்தனா்.

ஓசரப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் கந்தசாமி மகன் தினேஷ் (22), பேக்கரி தொழிலாளி. சங்கம்பட்டியில் உள்ள சகோதரியை பாா்க்க வியாழக்கிழமை பைக்கில் சென்ற இவா், தனது சகோதரி மகனான சாய் சரணையும் (3) அழைத்துக் கொண்டு ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா்.

ஒ. கிருஷ்ணாபுரம் அருகே சென்ற போது துறையூா் நோக்கி சென்ற லாரி மோதி குழந்தை உயிரிழந்தது. பலத்த காயமடைந்த தினேஷ் துறையூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநரான வைரிசெட்டிப்பாளையம் வீ. பாலசுப்பிரமணியனை (22) கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com