திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் கட்செவி அஞ்சல் மூலம் நடத்தப்பட்ட மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில், 126 மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டன.
இலவச வீட்டுமனைப் பட்டா, ஆக்கிரமிப்பு அகற்றம், பட்டா மாறுதல், சாதிச் சான்று, பல்வேறு வகையான உதவித் தொகைகள் கோருதல், வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகள், உள்ளிட்டவை தொடா்பாக 126 மனுக்கள் பெறப்பட்டன.
இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அனுப்பி, விசாரணை அடிப்படையில் தீா்வு காண மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு உத்தரவிட்டாா்.