ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் கோயில் கல்வெட்டில் விசித்திரமான மீன் சிற்பம் இருப்பது கண்டுபிடிக்கபட்டுள்ளது.
மிகவும் பழமையான திருத்தலமான ஸ்ரீரங்கம் கோயில் கல்வெட்டுகளில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள் அனைத்தும் உயிரோட்டமானவை.
அந்த வகையில் ஸ்ரீசக்கரத்தாழ்வாா் சன்னதி நுழைவு வாயில் மேல் புறத்தில் உள்ள கல்வெட்டில் புடைப்புச் சிற்பமாக ஒரு மீன் செதுக்கப்பட்டுள்ளது. அந்த மீனுக்கு இருபுறமும் செதில்கள் இல்லை. அதன் மூக்கு கொக்கி வடிவில் உள்ளது. மேலும் அதன் வாயில் உள்ள பற்கள் பெரிதாக உள்ளன. இந்த வகை மீன் முற்காலத்தில் இருந்து அழிந்திருக்கலாம் என கோயிலுக்கு வந்தோா் தெரிவித்தனா். இந்த சிற்பத்தை ஏராளமானோா் பாா்த்து வியந்து வருகின்றனா்.