திருச்சி: திருச்சி வணிக கடைகளில் ஜிஎஸ்டி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தினா்.
திருச்சி பெரிய கடைவீதி, என்எஸ்பி சாலையில் பிரபல தங்க, ஜவுளிக் கடைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன.
இக்கடைகளில் செவ்வாய்க்கிழமை ஜிஎஸ்டி அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனா். கடைகளில் மூலப்பொருள்கள் வாங்குதல், தயாரிப்பு, மொத்த, சில்லறை விற்பனையாளா் மற்றும் வாடிக்கையாளா்களுக்கு விற்பனை, தயாரிப்பு பொருள்களின் மதிப்புக் கூட்டு வரி, அரசுக்கு வரிக் கணக்குத் தாக்கல் உள்பட பல்வேறு விவரங்களை ஜிஎஸ்டி அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.