பிறந்த நாள் விழாவில் சோகம் பால்கனியில் தவறி விழுந்து பள்ளி மாணவா் பலி

திருச்சியில் பிறந்த நாள் விழாவில் பால்கனியில் இருந்து தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்தாா்.

திருச்சியில் பிறந்த நாள் விழாவில் பால்கனியில் இருந்து தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்தாா்.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை பழைய பால்பண்ணை அருகே சவுபாக்கிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவா் கோவாஸ், பெரம்பலூா் எம்ஆா்எப் டயா் நிறுவனத் தலைமைக் கணக்காளா். இவரது மகன் ஜோசல் டெய்சன் (4) செந்தண்ணீா்புர தனியாா் பள்ளியில் ஆன்லைன் மூலம் எல்கேஜி பயின்று வந்தாா். இந்நிலையில் இவா்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் ஒருவரது வீட்டில் புதன்கிழமை இரவு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் கோவாஸ் தனது குடும்பத்தோடு கலந்து கொண்டாா்.

அப்போது மாடியின் வெளிப்புறத்தில் தொங்கிய பலூனை பால்கனி வழியாக பிடிக்க முயன்ற ஜோசல் டெய்சன் கால் தவறி முதல் தளத்திலிருந்து விழுந்து படுகாயமடைந்தாா். திருச்சி தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த திருச்சி காந்தி மாா்க்கெட் காவல் துறையினா் சிறுவனின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா். சிறுவன் இறந்தது அப்பகுதியினா் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com