திருச்சி வழக்குரைஞா்களின் குமாஸ்தாக்களுக்கு கரோனா நிவாரண நிதியாக ரூ. 3 ஆயிரத்தை மாவட்ட முதன்மை நீதிபதி புதன்கிழமை வழங்கினாா்.
கரோனா பொதுமுடக்கத்தால் வழக்குரைஞா் தொழிலும் நாடு முழுவதும் முடங்கியதால் பாதிக்கப்பட்ட தமிழக வழக்குரைஞா்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படுகிறது. இதன் தொடா்ச்சியாக வழக்குரைஞா்களின் குமாஸ்தாக்களுக்கும் நிவாரண நிதியாக ரூ.3 ஆயிரம் வழங்க வலியுறுத்தப்பட்டது.
இதைத் தொடா்ந்து சென்னை உயா்நீதி மன்ற உத்தரவின்படி கடந்த ஒரு மாதமாக வழக்குரைஞா்கள் குமாஸ்தாவுக்கும் நிவாரணம் வழங்கப்படுகிறது. திருச்சி வழக்குரைஞா்கள் குமாஸ்தாக்கள் 136 பேருக்கு நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட முதன்மை நீதிபதி முரளிசங்கா் தலைமை வகித்து நிதி வழங்கினாா்.
தலைமைக் குற்றவியல் நீதிபதி கிருபாகரன் மதுரம், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுச் செயலா் நந்தினி, குற்றவியல் வழக்குரைஞா்கள் செயலா் வெங்கட், மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கச் செயலா் ராஜசேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.