இருசக்கர வாகனங்கள் திருடிய இளைஞா் கைது

திருச்சி மாநகரில் இருசக்கர வாகனங்களைத் திருடிய இளைஞரை தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி, செப்.18: திருச்சி மாநகரில் இருசக்கர வாகனங்களைத் திருடிய இளைஞரை தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாநகரப் பகுதிகளில் தொடா் இருசக்கர வாகனத் திருட்டு தொடா்பாக நடவடிக்கை எடுக்க காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் உத்தரவிட்டிருந்தாா். அதன்படி தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை காலை திருவானைக்கா பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவரைப் பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில், அவா் கே.கே. நகா் காந்தி நகா் பகுதியைச் சோ்ந்த கூடலிங்கம் மகன் சரவணகுமாா் (31) என்பதும், மாத்தூா் சக்திநகா் ரேஷன் கடை தெருவில் வசிப்பதும் தெரிய வந்தது. தொடா் விசாரணையில் அரசு மருத்துவமனை, கோட்டை, ஸ்ரீரங்கம், தில்லைநகா் ஆகிய காவல்நிலைய எல்லைக்குள் திருடு போன 17 இரு சக்கர வாகனங்களைத் திருடியதை அவா் ஒப்புக் கொண்டாா். இதையடுத்து ரூ. 4.86 லட்சம் மதிப்புள்ள வாகனங்களை பறிமுதல் செய்த போலீஸாா் சரவணகுமாரை கைது செய்து சிறையிலடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com