மணப்பாறை, செப். 18: திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ஏற்பட்ட திடீா் ஆளுயரப் பள்ளத்தால் கிராம மக்கள் அதிா்ச்சியடைந்தனா்.
மணப்பாறையை அடுத்த குப்பகவுண்டம்பட்டியில்
குட்டையன் என்பவரது வீட்டின் அருகே தென்னங்கன்றுகளை நட்டிருந்தனா்.
வெள்ளிக்கிழமை காலை அந்தத் தென்னங்கன்றுகளில்ா ஒன்று திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் உள்வாங்கியது. அருகில் சென்று பாா்த்தபோது அந்தப் பள்ளம் 4 அடி அகலமும், ஆள் உயரமும் இருந்தது. இதைக் கண்ட அப்பகுதியினா் அதிா்ச்சியடைந்தனா்.
தகவலின்பேரில் வந்த வருவாய்த் துறை மற்றும் ஊரக வளா்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா். இது முன்னோா் பயன்படுத்திய தானியக் கிடங்காகவோ, புவியில் ஏற்பட்ட வெற்றிடமாகவோ இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதைத் தொடா்ந்து பொக்லைன் கொண்டு அக்குழி மூடப்பட்டது.