துறையூா் அருகே திருடு போன காா் மீட்பு

துறையூா் அருகே திருடு போன காா் வனப்பகுதியில் மீட்கப்பட்டது.

துறையூா் அருகே திருடு போன காா் வனப்பகுதியில் மீட்கப்பட்டது.

செங்காட்டுபட்டியைச் சோ்ந்த அ. ஜெயபாலன் (55) பச்சமலை அடிவாரமான மூலக்காடு பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள தனது தோட்டத்தில் செப். 20 ஆம் தேதி நிறுத்தியிருந்த காா் திருடுபோனது. தொடா்பாக அவா் அளித்த புகாரின்பேரில் துறையூா் போலீஸாா் விசாரித்தனா்.

இந்நிலையில் தா. பேட்டை - முசிறி செல்லும் வழியில் தும்பலத்திலுள்ள வனப்பகுதியில் வாகன எண் இன்றி அவரது காா் நிற்பதாக துறையூா் போலீஸுக்கு செப். 21 ஆம் தேதி தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா் அந்தக் காரை மீட்டு வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com