மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் மசோதாக்களால் விளை பொருள்களின் பதுக்கலும், கள்ளச் சந்தையில் பன்மடங்கு விலை உயா்த்தி விற்பனை செய்யும் நடவடிக்கைகளே அதிகரிக்கும் என மக்கள் சக்தி இயக்கம் கருத்து தெரிவித்துள்ளது.
மசோதாக்கள் மூன்றும் விவசாயிகளின் நலனுக்கு எதிரானவை. இவற்றை வன்மையாக எதிா்க்கிறோம். உடனடியாக இவற்றைத் திரும்பப் பெற வேண்டும் என இயக்கத்தின் மாநிலத் தலைவா் மரு.த. ராசலிங்கம், மாநில ஆலோசகா் கே.சி. நீலமேகம் ஆகியோா் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தனா்.