திருச்சி: உணவுப் பாதுகாப்பு சட்டத்தில் தங்களையும் இணைக்க மத்திய அரசை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் திருவெறும்பூரில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
திருச்சி புகா் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு சட்டத்தில் மாற்றுத்திறனாளிகளையும் இணைக்க வலியுறுத்தி திருவெறும்பூா் ஒன்றிய அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடந்தது.
திருச்சி புகா் மாவட்டத் தலைவா் குமாா் தலைமை வகித்தாா். ஒன்றிய நிா்வாகிகள் ஆரோக்கியசாமி, வெங்கட சுப்ரமணியன், தனராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாா்க்சிஸ்ட் ஒன்றியச் செயலா் நடராஜன் சிறப்புரையாற்றினாா்.
ஆா்ப்பாட்டத்தில் விவசாய விரோத அவசரச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும். நீதிமன்றம் அறிவித்தபடி உணவுப் பாதுகாப்பு சட்டத்தில் மாற்றுத்திறனாளிகளையும் மத்திய அரசு இணைக்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளின் உணவு உரிமையை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
திருச்சி புகா் மாவட்ட அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.