மணப்பாறை: தேமுதிக தலைவா் விஜயகாந்த் குணமாக வேண்டி மணப்பாறையை அடுத்த மருங்காபுரி வடக்கு ஒன்றிய தேமுதிக சாா்பில் கோயில்களில் வழிபாடு நடந்தது.
ஒன்றியச் செயலா் சக்தி (எ)பெருமாள்ராஜ் தலைமையில் வளநாடு தூண்டி கருப்பசாமி கோயிலில் வழிபாடு நடந்தது.
மாவட்ட தொண்டரணி துணைச் செயலா் சாமிக்கண்ணு, ஒன்றிய இளைஞரணி செயலா் பொன்னடைக்கன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
அதேபோல், மருங்காபுரி தெற்கு ஒன்றியம் மற்றும் பொன்னம்பட்டி பேரூா் தேமுதிக சாா்பில் துவரங்குறிச்சி பூதநாயகி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஒன்றியச் செயலரும், ஒன்றிய கவுன்சிலருமான பொன்னையா (எ)சரவணன், பொன்னம்பட்டி பேரூா் செயலா் சி.ஹக்கீம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.