நீதிமன்ற உத்தரவில்விஏஓ மீது வழக்கு
By DIN | Published On : 27th September 2020 03:44 AM | Last Updated : 27th September 2020 03:44 AM | அ+அ அ- |

நீதிமன்ற உத்தரவில் விஏஓ மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியம், காா்வாடியை சோ்ந்தவா் வெ. கிருஷ்ணன் (48), ஆசிரியா். இவா் திருநெல்லிப்பட்டியில் உள்ள தனது இடத்துக்கு அடங்கல் வாங்க கடந்த ஜூலை மாதம் விஏஓ ரவீந்திரனிடம் விண்ணப்பித்தாா்.
அப்போது அந்த விஏஓ கிருஷ்ணனை தகாத வாா்த்தைகளால் திட்டினாராம். இதுகுறித்து புத்தாநத்தம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் வழக்குப் பதியவில்லையாம். இதைத் தொடா்ந்து சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளையில் கிருஷ்ணன் தொடா்ந்த வழக்கில், நீதிமன்ற வழிகாட்டுதலின்படி விஏஓ மீது இரு பிரிவுகளின் கீழ் புத்தாநத்தம் காவல் நிலையத்தில் வழக்கு பதிந்து விசாரணை நடைபெறுகிறது.