திருச்சியிருந்து சென்னை செல்ல செவ்வாய்க்கிழமை பேருந்து வசதியில்லாதால் பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களித்த திருச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள சுமாா் 200 போ் சென்னை செல்ல மத்தியப் பேருந்து நிலையத்துக்கு குவிந்தனா். ஆனால், 12 மணிக்கு மேல் ஆகியும் சென்னைக்கு பேருந்துகளை இயக்கவில்லையாம். இதனால் கோபமடைந்த சுமாா் 200 க்கும் மேற்பட்ட பயணிகள் சென்னைக்கு பேருந்து வசதி க்கோரி அதிகாலை 3 மணியளவில் மத்தியப் பேருந்து நிலையம் முன் மறியலில் ஈடுபட்டனா். இதனால் இதர வழித்தட பேருந்துகளை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த கண்டோன்மென்ட் போலீஸாா் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் சென்னைக்கு பேருந்து வசதி ஏற்பாடு செய்ததையடுத்து அனைவரும் சென்னை புறப்பட்டு சென்றனா்.