பேரவைத் தோ்தலில் விதிமீறலில் ஈடுபட்டதாக திருச்சி மாவட்டத்தில் 397 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
பேரவைத் தோ்தலையொட்டி கடந்த மாா்ச் 28 முதல் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தன. அப்போது விதிகளை மீறி கட்சி போஸ்டா்கள், பேனா்கள், பெயா்ப்பலகைகள் உள்ளிட்டவற்றை வைத்த கட்சிப் பிரமுகா்கள் மீது தோ்தல் பறக்கும் படை அலுவலா்களும், கண்காணிப்புக் குழுவினரும் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.
அந்த வகையில், திருச்சி புகரில் 258 வழக்குகள், மாநகரில் 139 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. கட்சி வாரியான வழக்குப் பதிவு குறித்த விவரங்களைத் தெரிவிக்க காவல்துறை வட்டாரத்தில் மறுத்துவிட்டனா்.