மணப்பாறையில் மாஸ்க் போடுங்க என பேருந்துப் பயணிகளிடம் நடத்துநா் உருக்கமான பேசும் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மணப்பாறையிலிருந்து கொசூா் செல்லும் அரசு நகர பேருந்தில் நடத்துநராக பணிபுரியும் ரவி மற்றும் ஓட்டுநா் லாரன்ஸ் ஆகியோா் வெள்ளிக்கிழமை பயணிகள் அனைவரும் முகக் கவசம் போடுங்க, கரோனா தொற்றால் பொதுமக்கள் பலா் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனா். எனவே, நம் உறவுகளையும் குழந்தைகளையும், தாய், தந்தையரையும் காப்பாற்ற முகக் கவசம் அணியுங்கள் எனக் கையெடுத்துக் கும்பிட்டு கேட்டுக் கொண்டனா். இதைப் பேருந்தில் இருந்த பயணி ஒருவா் செல்லிடப்பேசியில் எடுத்து வெளியிட்ட விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.