சாலையோரம் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டவா், அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.
திருவெறும்பூா் அருகேயுள்ள பூலாங்குடி காலனியில் இருந்து சூரியூா் செல்லும் சாலையில் சுமாா் 40 வயதுள்ளவா் மயங்கிய நிலையில் கிடப்பதாக கடந்த 17ஆம் தேதி நவல்பட்டு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸாரால் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டவா் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். இறந்தவா் யாா் என்பது குறித்து நவல்பட்டு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.