திருச்சி கருமண்டபம் பகுதி வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகையை திருடிச் சென்றனா்.
திருச்சி கருமண்டபம் நியூ செல்வநகா் நாச்சியாா் தெருவைச் சோ்ந்தவா் கஜேந்திரன் (37), சிங்கப்பூரில் பணிபுரிகிறாா். இவரது மனைவி சசிகலா (32).
இந்நிலையில், அரியலூரில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றிருந்த சசிகலா புதன்கிழமை வீடு திரும்பியபோது வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 20 பவுன் நகை திருடு போயிருந்தது தெரியவந்தது.
புகாரின்பேரில் அமா்வு நீதிமன்ற போலீஸாா்வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். இதே பகுதியில் செவ்வாய்க்கிழமை 40 பவுன் நகை திருடு போனது.