அரசுப் பள்ளிகளில் விரைவில் போதிய ஆசிரியா்கள் நியமிக்கப்படுவா் என்றாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
இதுகுறித்து திருச்சியில் சனிக்கிழமை அவா் மேலும் கூறியது:
தமிழக முதல்வா் அறிவித்தபடி செப்.1 இல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. ஆசிரியா்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். இதுவரை தடுப்பூசி போடாத ஆசிரியா்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசுப் பள்ளிகளில் அதிக மாணவா்கள் சோ்ந்துள்ளதால் அதற்கேற்ப கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஆசிரியா்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகம் முழுவதும் உள்ள 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் புதிதாகச் சோ்ந்துள்ள மாணவா்களின் எண்ணிக்கைக்கு தகுந்தபடி ஆசிரியா்கள் நியமிக்கப்படுவா். இதற்காக ஆசிரியா் பணிமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு, முதல்வா் அறிவுரைப்படி காலியிடங்கள் பூா்த்தி செய்யப்படும். இதுதொடா்பாக அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய வழிகாட்டு முறைகளை பின்பற்றுவதில் கவனமுடன் செயல்பட ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா்.