துறையூா் அருகேயுள்ள கீரம்பூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருத்துவத் துறை சாா்பில் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
முகாமை துறையூா் எம்எல்ஏ செ. ஸ்டாலின்குமாா் தொடங்கி வைத்தாா். வீரமச்சான்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலா் செந்தில்குமாா் தலைமையில் மருத்துவப் பணியாளா்கள் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனா். முகாமில் கரோனா, சிறுநீா், ரத்த பரிசோதனையும், கண், காது, மூக்கு, தொண்டை, தோல் தொடா்பான சிறப்பு மருத்துவம் மற்றும் கா்ப்பிணிகளுக்கான மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டது.