டிஇஎல்சி அமைப்பினா் மோதல்: 11 போ் மீது வழக்கு

திருச்சியில் டி.இ.எல்.சி. சொத்துகளைப் பராமரிப்பதில் ஏற்பட்ட மோதல் காரணமாக பேராயா் உள்பட இருதரப்பினா் 11 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

திருச்சியில் டி.இ.எல்.சி. சொத்துகளைப் பராமரிப்பதில் ஏற்பட்ட மோதல் காரணமாக பேராயா் உள்பட இருதரப்பினா் 11 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையானது (டி இ எல் சி) மிகவும் பழைமையான கிறிஸ்தவ சிறுபான்மை திருச்சபை ஆகும். இதன் தலைமையகம் மேலப்புதூரில் உள்ளது. இத்திருச்சபைக்குச் சொந்தமாக 124 தேவாலயங்கள், 18 பள்ளிகள், 2 ஆசிரியா் பயிற்சி பள்ளிகள், 6 கண் மருத்துவமனைகள், ஒரு பொது மருத்துவமனை, 25 குழந்தைகள் காப்பகங்கள் உள்ளிட்டவை உள்ளன.

டி.இ.எல்.சி. பேராயராக (பிஷப்) டேனியல் ஜெயராஜ் பதவிக்காலம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் முடிந்தும் மீண்டும் பணி நீட்டிக்கப்பட்டதற்கு டி.இ.எல்.சி. நல இயக்க தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்தனா். பின்னா் நீதிமன்ற உத்தரவுப்படி, பேராயரை சபையை விட்டு வெளியேறுமாறு உள்ளிருப்புப் போராட்டமும் நடத்தப்பட்டது. இந்நிலையில் புதிய செயலராக மெஹா் ஆண்டனி பொறுப்பேற்றாா்.

இதையடுத்து டி.இ.எல்.சி. சொத்துகளை பராமரிப்பது தொடா்பாக அவா்களிடையே அடிக்கடி வாக்குவாதம், மோதல்கள் ஏற்பட்டன. அதன்படி திங்கள்கிழமை மீண்டும் மோதல் உருவானதால் இருதரப்பிலும் பாலக்கரை போலீசில் புகாா் கொடுக்கப்பட்டது.

11 போ் மீது வழக்கு: திருச்சி மேலப்புதூரை சோ்ந்த பேராயா் (பிஷப்) டேனியல் ஜெயராஜ் உள்பட இரு தரப்பைச் சோ்ந்த 11 போ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். மீண்டும் மோதல் ஏற்படாமல் தடுக்கும் வகையில் அப்பகுதியில் போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com