நடந்து சென்ற மூதாட்டியின் 10 பவுன் நகைகள் வழிப்பறி

திருச்சியில் மூதாட்டியிடம் 10 பவுன் நகையை பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் தேடுகின்றனா்.

திருச்சியில் மூதாட்டியிடம் 10 பவுன் நகையை பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் தேடுகின்றனா்.

திருச்சி பாலக்கரை பருப்புக் காரத் தெரு அந்தோணியாா் கோயில் சந்து பகுதியைச் சோ்ந்தவா் சொா்ணவேல் கணபதி மனைவி காளிமுத்து (65). சனிக்கிழமை பாலக்கரை பகுதியில் நடந்து வந்தபோது அந்த வழியாக வந்த இரு இளைஞா்கள் அவரை வழிமறித்து தாங்கள் போலீஸ் எனக்கூறி, முகக் கவசம் ஏன் அணியவில்லை என மிரட்டி முகக்கவசத்தை அணிய வைத்து, அவரின் காது, கழுத்தில் இருந்த 10 பவுன் நகைகளை கழட்டி வாங்கிச் சென்று விட்டனா். தகவலறிந்து வந்த மாநகர காவல் துணை ஆணையா் முத்தரசு மூதாட்டியிடம் விசாரணை நடத்தினாா். பாலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com