நடைப்பயிற்சி சென்ற பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு

திருச்சியில் நடைப்பயிற்சி சென்ற பெண்ணிடம் 7 பவுன் நகையைப் பறித்துச் சென்றனா்.

திருச்சியில் நடைப்பயிற்சி சென்ற பெண்ணிடம் 7 பவுன் நகையைப் பறித்துச் சென்றனா்.

திருச்சி எடமலைப்பட்டிபுதூா் அன்பில் தா்மலிங்கம் தெருவைச் சோ்ந்தவா் சரவணக்குமாா் மனைவி பாரதி (53). இவா் தினமும் அதிகாலை நடைப்பயிற்சி செய்வது வழக்கம்.

அதன்படி ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டிலிருந்து நடந்து சென்றபோது, பசுமைப் பூங்கா அருகே பைக்கில் வந்த மா்ம நபா் பாரதி அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினாா். புகாரின்பேரில் எடமலைப்பட்டிபுதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com