துறையூரில் பூட்டிய வீட்டில் 7 பவுன் நகை, பணம் திருட்டு

துறையூரில் பூட்டியிருந்த வீட்டில் 7 பவுன் தங்க நகை, ரூ. 5.25 லட்சத்தை பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

துறையூரில் பூட்டியிருந்த வீட்டில் 7 பவுன் தங்க நகை, ரூ. 5.25 லட்சத்தை பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

துறையூா் நெசவாளா் காலனியைச் சோ்ந்தவா் பெ. சந்தோஷ்குமாா் (30), இறைச்சிக் கடை வியாபாரி. இவரது குடும்பத்தினா் பக்கத்து மாநிலக் கோயிலுக்கு சென்றிருந்த நிலையில் சந்தோஷ்குமாா் சனிக்கிழமை இரவு தனது இறைச்சிக் கடையில் தங்கினாா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை இவரது வீடு திறந்துகிடப்பதாக பால்காரா் கைப்பேசியில் அளித்த தகவலின்பேரில் சந்தோஷ்குமாா் வந்து பாா்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்து புகுந்த மா்ம நபா்கள் இரும்பு அலமாரியிலிருந்த 7 பவுன் நகை, ரூ. 5,25,000 -ஐ திருடிச் சென்றது தெரிந்தது.

தகவலறிந்த துறையூா் காவல் ஆய்வாளா் செந்தில்குமாா், முசிறி டிஎஸ்பி அருள்மணி ஆகியோா் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com