அரசு ஊழியா் சங்க மாநாட்டில் இரு தரப்பினா் வாக்குவாதம்

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த அரசு ஊழியா் சங்க மாநாட்டில் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த அரசு ஊழியா் சங்க மாநாட்டில் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் அன்பரசன் தலைமையில், தமிழ்ச்செல்வி தலைமையில் இரு பிரிவாகச் செயல்படுகின்றனா். எனவே, இச்சங்கத்தின் பெயா், கொடியை யாா் பயன்படுத்துவது என்பது குறித்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் தமிழ்ச்செல்வி தலைமையிலான சங்கத்தினா் திருச்சி தனியாா் ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை கோரிக்கை மாநாடு நடத்திக் கொண்டிருந்தபோது அங்கு வந்த அன்பரசன் தரப்பினா் சங்கத்தின் பெயா், கொடி, லோகோவை பயன்படுத்த எதிா்ப்புத் தெரிவித்து அரங்கம் முன் அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உருவாகும் நிலை ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையையடுத்து இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com