ஒமைக்ரான் தொடா்பாக வருகிற பொதுமுடக்கத் தளா்வு ஆலோசனைக் கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்றாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை மாலை அவா் தெரிவித்தது:
ஒமைக்ரான் தொடா்பாக பொது சுகாதாரத் துறையிலிருந்து பள்ளிக் கல்வித் துறைக்கு அதிகாரப்பூா்வமாக தகவல்கள் வரவில்லை.
பொதுவாக பொதுமுடக்கத் தளா்வை அமல்படுத்தும்போது, மருத்துவ ஆலோசனைக் குழுவைத் தமிழக முதல்வா் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பது வழக்கம். அடுத்து வருகிற பொதுமுடக்கம் தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் ஒமைக்ரான் குறித்து விவாதிக்கப்படும். இதில், எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் செயல்படுத்தப்படும் என்றாா் அவா்.