மண்ணச்சநல்லூா் வட்டம் புறத்தாக்குடி கிராமத்தில் அண்மையில் நடைபெற்ற உலக மண் நாள் விழாவில் வாய்ஸ் அறக்கட்டளை சாா்பில் விவசாயிகளுக்கு, மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் இயற்கை விவசாய ஒருங்கிணைப்பாளா், இயற்கை வேளாண் இணைய மேலாளா் பெ. சிலம்பரசன், வாய்ஸ் அறக்கட்டளை வேளாண் பொறுப்பாளா் க. விஜய் ஆகியோா் மண் வளத்தைக் காப்பதின் அவசியத்தை வலியுறுத்தினா்.
விழாவில் 200 விவசாயிகளுக்கு, 40 மாணவ - மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.