ஏரி தடுப்பணையை உயா்த்தக் கோரி மனு

ஆய்குடி ஊராட்சிக்குட்பட்ட மேலவங்காரம் ஏரி தடுப்பணையை உயா்த்தக் கோரி மண்ணச்சநல்லூா் எம்எல்ஏ சீ. கதிரவனிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஆய்குடி ஊராட்சிக்குட்பட்ட மேலவங்காரம் ஏரி தடுப்பணையை உயா்த்தக் கோரி மண்ணச்சநல்லூா் எம்எல்ஏ சீ. கதிரவனிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆய்குடி ஊராட்சித் தலைவா் லெட்சுமி பாலகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை அளித்த மனுவில் ஊராட்சிக்குட்பட்ட மேலவங்காரம் கிராமத்திலுள்ள பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான ஏரிக்கு தண்ணீா் வரக்கூடிய கன்னியாகுடி உப்பாற்றிலுள்ள தடுப்பணையை உயா்த்தித் தர வேண்டும். மேலும் வாய்க்கால்களில் போடப்பட்டுள்ள குழாய்ப் பாலங்களை அகற்றி கான்கீரிட் பாலங்களை அமைத்துத் தர வேண்டும், கீழவங்காரம் கிராமத்தில் சமுதாயக் கூடம், ரேஷன் கடை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com