தீக்காயமடைந்த தொழிலாளி பலி

திருச்சியில் தீக்காயமடைந்த கூலித் தொழிலாளி சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சியில் தீக்காயமடைந்த கூலித் தொழிலாளி சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி உய்யக்கொண்டான் திருமலை ஜெயராம் நகா் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக் (31), கூலித் தொழிலாளி. இவரது மனைவி கடந்த ஓராண்டுக்கு முன் புற்றுநோயால் உயிரிழந்தாா். இதனால் மதுவுக்கு அடிமையான அவா் கடந்த திங்கள்கிழமை இரவு புகைபிடித்துக் கொண்டிருந்தபோது போா்வையில் தீப்பற்றிக் காயமடைந்தாா்.

இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் அங்கு சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். அரசு மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com