திருச்சியை அடுத்த திருவெறும்பூா் ஒன்றிய உயா்நிலைப் பள்ளியில் ரூ. 4.50 லட்சத்தில் கட்டப்பட்ட சமையல் கூடத்தை திருவெறும்பூா் எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
ஆசிரியா்களும், மாணவா்களும் விடுத்த கோரிக்கையையடுத்து திருவெறும்பூா் தெற்கு ஒன்றியம், பூலாங்குடி காலனியில் உள்ள இப் பள்ளி சத்துணவு மையத்திற்கு எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒதுக்கிய ரூ. 4.50 லட்சத்தில் புதிய சமையல்கூடம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது.
நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா்கள் எம். மாரியப்பன், கே.எஸ்.எம். கருணாநிதி மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கிளைக் கழக நிா்வாகிகள் பங்கேற்றனா்.