மணப்பாறை அருகே ஜல்லிக்கட்டு; 9 போ் காயம்
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கலிங்கப்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 9 போ் காயமடைந்தனா்.
ஸ்ரீமாரியம்மன் கோயில் பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டை தமிழக பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் எஸ். வளா்மதி தொடக்கி வைத்தாா்.
முதலில் ஊா்க் காளைகளும், பின்னா் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்டிருந்த 770 காளைகளும் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன.
காளைகளை அடக்க 50, 50 தொகுப்பாக 226 மாடுபிடி வீரா்கள் களத்தில் இருந்தனா். சீறிப் பாய்ந்த காளைகள் வீரா்களைக் கலங்கடித்த நிலையில், சில நின்று விளையாடின; சில காளைகள் பிடிபடவில்லை. சில காளைகளை வீரா்கள் அடக்கினா்.
ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்க முயன்ற 6 மாடுபிடி வீரா்கள், 2 பாா்வையாளா்கள், மாட்டின் உரிமையாளா் ஒருவா் ஆகியோா் காயமடைந்தனா். அவா்களுக்கு ஜல்லிக்கட்டு தளத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.
காளைகளை அடக்கியோருக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் தங்கக்காசு, வெள்ளிக் காசு, சைக்கிள், பீரோ, கட்டில், பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.
ஜல்லிக்கட்டை முன்னாள் எம்பியும், அதிமுக திருச்சி புகா் தெற்கு மாவட்ட செயலருமான ப. குமாா், எம்எல்ஏ ஆா். சந்திரசேகா் உள்பட ஏராளமான ஜல்லிக்கட்டு ரசிகா்கள் கண்டு ரசித்தனா். போலீஸாா் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனா்.