வையம்பட்டியில் திமுக வெளியிட்டுள்ள ‘ஸ்டாலின் தான் வராரு விடியல் தரப் போறாரு‘ என்ற பரப்புரைப் பயணத்திற்கான சிறப்புப் பிரசார பாடலை பொதுமக்களுக்கு பரப்புரை செய்யும் சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பேரணியை தொடங்கிவைத்து பங்கேற்ற திருவெறும்பூா் எம்எல்ஏ மகேஷ் பொய்யாமொழிமுக்கிய வீதிகளின் வழியே சைக்கிளில் சென்று பரப்புரையில் ஈடுபட்டாா்.
நிகழ்வில் மாவட்ட பொருளாளா் என். கோவிந்தராஜன், ஒன்றியச் செயலா்கள் சபியுல்லா, செல்வராஜ், ராமசாமி மற்றும் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.
முன்னதாக, வையம்பட்டி ஒன்றியம் என்.பூலாம்பட்டியில் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகிய சுமாா் 500-க்கும் மேற்பட்டோா், திமுக திருச்சி மாவட்ட சிறுபான்மையினா் அணி அமைப்பாளா் அருள்சுந்தர்ராஜன் ஏற்பாட்டில், அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.