மணப்பாறை அருகே இளம்பெண் தற்கொலை

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இளம்பெண் தூக்ககிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இளம்பெண் தூக்ககிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மறவனூா் இடையபட்டியைச் சோ்ந்தவா் தங்கராசு மகள் கஸ்தூரி(20). இவருக்கும் பொய்கைப்பட்டியைச் சோ்ந்த ஜெயராமனுக்கும் (32) கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது.

மணப்பாறை பகுதி தனியாா் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்த கஸ்தூரி கணவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 6 மாதமாக தனது பெற்றோா் வீட்டில் வசித்து வந்த நிலையில் வெள்ளிக்கிழமை அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து கே.பெரியபட்டி(தெ) விஏஓ காா்த்திகேயன் அளித்த புகாரின்பேரில் போலீஸாா், சடலத்தை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். கோட்டாட்சியா் விசாரணையும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com