ஸ்ரீரங்கம்: திருவானைக்கா சம்புகேஸ்வரா் அகிலாண்டேஸ்வரி கோயிலில் ஜன. 27 இல் நடைபெறும் தைத் தெப்ப விழாவுக்காக ஞாயிற்றுக்கிழமை மாலை (ஜன.17) கொடியேற்றம் நடைபெறுகிறது.
இக்கோயிலில் ஆடி, தை மாதங்களில் தெப்ப உத்ஸவம் நடைபெறும். நிகழாண்டில் தைத் தெப்ப உத்ஸவத்திற்காக ஞாயிற்றுக்கிழமை மாலை கொடியேற்றம் நடைபெறவுள்ளது.
12 நாள்கள் நடைபெறும் விழாவில் நாள்தோறும் சுவாமியும், அம்மனும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி 4 ஆம் பிரகாரத்தை சுற்றி வலம் வந்து பக்தா்களுக்குச் சேவை சாதிக்கின்றனா்.