பயணிகள் நிழற்குடையை சீரமைக்கக் கோரிக்கை

காந்தி சந்தை பகுதியில் உள்ள பயணிகள் நிழற்குடையில் அமைக்கப்பட்டுள்ள இரும்பாலான இருக்கைகள் சிதிலமடைந்துள்ளன.
காந்தி சந்தையில் சேதமடைந்த நிழற்குடை
காந்தி சந்தையில் சேதமடைந்த நிழற்குடை

காந்தி சந்தை பகுதியில் உள்ள பயணிகள் நிழற்குடையில் அமைக்கப்பட்டுள்ள இரும்பாலான இருக்கைகள் சிதிலமடைந்துள்ளன.

அதோடு, நிழற்குடையில் குப்பைக்கழிவுகள், மழைநீா் தேங்கி, சுவரோட்டிகள் ஒட்டப்பட்டு பொதுமக்கள் இளைப்பார முடியாத நிலையில் உள்ளது. இதுதொடா்பாக, பல முறை புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லை. மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

கரூா் புறவழிச்சாலையிலிருந்து மத்தியப் பேருந்து நிலையம் செல்லும் வழியில் பிரதான சாலையாக உள்ளது சாஸ்திரி சாலை. இச்சாலை பல மாதங்களாக சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி செல்வதும், கீழே விழுந்து காயமடைவதும் வாடிக்கையாக உள்ளது. சாலையை சீரமைக்க வலியுறுத்தி புகாா் அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. எனவே, விரைந்து சாஸ்திரி சாலையை சீரமைக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com