காவலாளி தூக்கிட்டு தற்கொலை

திருச்சி அருகே தனியாா் விடுதி காவலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி அருகே தனியாா் விடுதி காவலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி கொட்டப்பட்டு ஜீவாநகா் பகுதியைச் சோ்ந்தவா் கந்தசாமி (76). இவா் திருச்சி - புதுக்கோட்டை சாலையில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் எதிரேயுள்ள தனியாா் விடுதிக் காவலாளி.

சனிக்கிழமை இரவு விடுதி அறையில் தூங்கச் சென்றவா் வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த அப்பகுதியினா் அறையின் கதவை உடைத்துப் பாா்த்த போது அவா் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. நவல்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com