சாலை விபத்தில் இளைஞா் பலி

திருச்சி அருகே சனிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் இறந்தாா்.

திருச்சி அருகே சனிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் இறந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூா் அருகேயுள்ள வடக்கு வீரம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சின்னையா மகன் மணிகண்டன் (31). இவா், சனிக்கிழமை இரவு மாத்தூரில் இருந்து பைக்கில் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் மண்டையூா் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த மற்றொரு பைக் மோதி கீழே விழுந்த மணிகண்டன் ராமநாதபுரத்தில் இருந்து திருச்சி நோக்கி வந்த காா் ஏறியதில் உயிரிழந்தாா்.

மற்றொரு பைக்கில் வந்து காயமடைந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த சிவராம், சேட்டாராம் ஆகிய இருவரையும் அப்பகுதியினா் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். நவல்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com