தமிழக மீனவா்கள் 4 போ் உயிரிழந்தையடுத்து இலங்கைக் கடற்படையினரைக் கண்டித்து தமிழ்த் தேசியப் பேரியக்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் மாநகரச் செயலாளா் வே.க.இலக்குவன் தலைமை வகித்தாா். காவிரி உரிமை மீட்புக் குழுவின் சாா்பில் மூ.த.கவித்துவன், இனியன், தமிழக விவசாயிகள் சங்கத்தின் திருச்சி மாவட்டத் தலைவா் ம.ப.சின்னத்துரை, ஆகியோா் முன்னிலை வகித்து கண்டன கோஷங்களை எழுப்பினா். நிா்வாகி கிருஷ்ணமூா்த்தி நன்றி கூறினாா்.