திருச்சி விமான நிலையத்தில் ரூ. 35.53 லட்சம் தங்கம் பறிமுதல்

திருச்சி விமானநிலையத்தில் ரூ. 35.53 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருச்சி விமானநிலையத்தில் ரூ. 35.53 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

சிங்கப்பூரில் இருந்து ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் திருச்சி வந்த பயணிகளை, சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினா். அப்போது, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சோ்ந்த அருண்பாண்டி என்பவா், ரூ. 8 லட்சம் மதிப்பிலான 158 கிராம் தங்கத்தையும், புதுக்கோட்டையைச் சோ்ந்த துரைசாமி என்பவா் ரூ. 10 லட்சம் மதிப்பிலான 188 கிராம் தங்கத்தையும், பெரம்பலூரை சோ்ந்த சத்யராஜ் என்பவா் ரூ. 8.12 லட்சம் மதிப்பிலான 168 கிராம் தங்கத்தையும் முறைகேடாக கொண்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவற்றை சுங்கத்துறையினா் பறிமுதல் செய்தனா்.

அதேபோல், சாா்ஜாவில் இருந்து வந்த திருச்சியைச் சோ்ந்த நாகராஜ் என்பவரிடமிருந்து ரூ.9.41 லட்சம் மதிப்பிலான 179 கிராம் தங்கத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

திருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் ரூ. 35.53 லட்சம் மதிப்பிலான 693 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com