எம்எல்ஏ கருணாஸ் கைதைக் கண்டித்து திருச்சியில் மறியல் செய்த அவரது கட்சியினரை காந்திசந்தை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னையில் இருந்து பசும்பொன் தேவா் சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை யாத்திரை புறப்பட்ட முக்குலத்தோா் புலிப்படை கட்சி நிறுவனரும், எம்எல்ஏவுமான கருணாஸ் கைது செய்யப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மறியல் நடைபெற்றது.
அதன்படி கட்சியின் திருச்சி மாவட்ட வழக்குரைஞா் பிரிவு செயலா் ரகுநாதன் தலைமையில் காந்திசந்தை பகுதியில் மறியலில் ஈடுபட்டனா். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அவா்களைக் கைது செய்தனா். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.