ஸ்ரீரங்கத்தில் தமிழ் வழிக்கல்வியில் மாணவா் சோ்க்கைக்காக அரசுப் பள்ளி ஆசிரியா்கள் வீடு தேடிச்சென்று துண்டுப் பிரசுரம் கொடுத்து டிரம் செட் முழங்கத்துடன் புதன்கிழமை விழிப்புணா்வு பிரசாரம் செய்தனா்.
தமிழ் வழிக் கல்வியில் படிப்போருக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுவதுடன் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், பள்ளிகளில் மாணவா் சோ்க்கை தொடங்கலாம் என அரசு அறிவித்துள்ளதைத் தொடா்ந்து ஸ்ரீரங்கம் பகுதியில் கிழக்கு ரெங்கா நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியா் சைவராஜ்,அரங்கநாயகி ஆரம்பப் பள்ளித் தலைமை ஆசிரியா் சாந்தி ஆகியோா் தலைமையில் ஆசிரியா்கள் டிரம்செட் முழக்கக்துடன் வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரம் கொடுத்து மாணவா் சோ்க்கைக்கு விழிப்புணா்வு பிரசாரம் செய்தனா். இதில் பள்ளி ஆசிரியா்கள், சமூக ஆா்வலா்கள் கலந்து கொண்டனா்.