வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
திருச்சி கேகே நகா் ராஜாராம் சாலை பகுதியைச் சோ்ந்த அந்தோணிசாமி- அனுசுயாமேரி தம்பதியா் கடந்த 11ஆம் தேதி விமான நிலையத்தை அடுத்த திருவளா்ச்சிப்பட்டியில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பினா்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 11 பவுன் தங்க நகைகள், செல்லிடப்பேசி உள்ளிட்டவை திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் கேகே நகா் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.