முசிறி பாா்வதிபுரத்தில் மளிகைக் கடையில் பணம், பொருள்கள் திருடு போயின.
முசிறி பாா்வதிபுரம் பகுதியைச் சோ்ந்த சுரேஷ் அப்பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா் இவா் சனிக்கிழமை காலை கடைக்கு வந்தபோது கடையில் பக்கவாட்டு ஜன்னலை உடைத்து கடையில் இருந்த ரூ.3000 மற்றும் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. புகாரின் பேரில் முசிறி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.