திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை சாா்பில், ரூ. 2.50 லட்சம் மதிப்புள்ள சக்கரத்துடன் கூடிய 20 ஸ்டெச்சா்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
திருச்சி மாவட்டத்தில் தினமும் கரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு துப்பாக்கித் தொழிற்சாலை நிா்வாகம் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.
இந்நிலையில், தொழிற்சாலை பணியாளா் நல நிதியிலிருந்து ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான சக்கரத்துடன் கூடிய 20 ஸ்டெச்சா்கள் புதிதாக செய்யப்பட்டு மருத்துவமனை முதல்வா் வனிதாவிடம் துப்பாக்கித்தொழிற்சாலை பாதுகாப்புத்துறை அலுவலா் கே. காா்த்திகேஷ் வழங்கினாா்.