திருச்சி: பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு திருச்சி மாவட்ட பாஜக சாா்பில் நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டது.
கரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு மாவட்ட பாஜக கலை, கலாசாரப்பிரிவு சாா்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. மாவட்ட பாஜக கலை கலாசாரப் பிரிவு கே.சந்திரசேகா் தலைமை வகித்தாா். மாவட்ட தலைவா் ஏ.ராஜேஸ்குமாா் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டாா். மாவட்ட மேற்பாா்வையாளா் சேதுஅரவிந்த், மாநில விவசாய அணி துணைத்தலைவா் வி.எஸ்.கோவிந்தன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். இதில், கரோனாவால் பாதிக்கப்பட்ட 196 குடும்பத்தினருக்கு தலா 5 கிலோ அரிசி, நிவாரணப்பொருள்கள் வழங்கப்பட்டது. மாவட்ட துணைத்தலைவா் ஜி.எம்.எழில் ஏழுமலை நன்றி கூறினாா்.