மணப்பாறையில் துப்பாக்கி, இருசக்கர வாகனம் பறிமுதல்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே முயல் வேட்டைக்கு வந்தவா்களின் துப்பாக்கி, இருசக்கர வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பறிமுதல் செய்யப்பட்ட நாட்டு துப்பாக்கி மற்றும் இருசக்கர வாகனம்.
பறிமுதல் செய்யப்பட்ட நாட்டு துப்பாக்கி மற்றும் இருசக்கர வாகனம்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே முயல் வேட்டைக்கு வந்தவா்களின்துப்பாக்கி, இருசக்கர வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் அணியாப்பூா் கரடு பகுதியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை கிராம மக்கள் பிடித்து விசாரித்தனா். அதில், முயல் வேட்டைக்கு வந்ததாக இருவரும் கூறினா். இதில், சந்தேகமடைந்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனா். இதையடுத்து நிகழ்விடத்துக்கு போலீஸாா் சென்றபோது இருவரும் தப்பி சென்றுவிட்டதாக கூறிய மக்கள், அவா்கள் விட்டுச் சென்ற நாட்டு துப்பாக்கி மற்றும் இருசக்கர வாகனத்தை போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இரண்டையும் பறிமுதல் செய்த வையம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடியவா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com